இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, இலங்கை கடற்படை, மன்னார் வட பகுதியிலுள்ள இலங்கை கடல்வள எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் எட்டுப் பேரை கைது செய்ததுடன் ஒரு இந்திய மீன்பிடி படகையும் பறிமுதல் செய்துள்ளது.
வட மத்திய கடற்படை கட்டளை தலைமையகம், இன்று அதிகாலை இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடி படகுகள் குழுவை கவனித்ததும், குறித்த படகுகளைத் துரத்திக் கடல்வள எல்லைக்கு வெளியேற்றுவதற்காக கடற்கரைத்தடுப்பு நீர்மூழ்கி காலங்களை அனுப்பியுள்ளது என கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்போது, தொடர்ந்தும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஒரு இந்திய மீன்பிடி படகும் அதில் இருந்த எட்டுப் பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட படகும், கைதான இந்திய மீனவர்களும் மன்னாரின் தல்பாடு பீயருக்கு கொண்டு வரப்பட்டு, மன்னார் மாவட்ட மீன்வள பரிசோதகரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
source- daily mirror
கருத்தை பதிவிட