முகப்பு இலங்கை திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள் – குடும்பஸ்தருக்கு எரி காயம்!
இலங்கைசெய்திசெய்திகள்

திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள் – குடும்பஸ்தருக்கு எரி காயம்!

பகிரவும்
பகிரவும்
யாழ்ப்பாணம், தென்மராட்சி – ஜூன் 17:
மந்துவில் பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 2.45 மணியளவில், வரணி வேம்பிராய் வீதியில் அமைந்துள்ள மந்துவில் மருதடி சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் நிகழ்ந்தது.

தகவல்களில் கூறப்படுவதாவது, வரணி பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், அருகிலுள்ள ஆலயத்திற்கு சென்று வீட்டுத் திரும்பும் வழியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். அந்தவேளையில் வீதிக்கு குறுக்காக ஒரு மாடு சென்றதால், மோட்டதில் மோதுவதைத் தவிர்க்கும் நோக்கில் அவர் திடீரென தடுப்பு பிரயோகித்து வாகனத்தை நிறுத்த முயற்சித்தபோது, மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீ விபத்தில், அந்த நபரின் உடைகளும் தீயில் சிக்கியதால், அவர் சிறிய எரி காயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...