முகப்பு உலகம் சுவிஸ் எபெறெற்றிக்கோனில் இடம்பெற்ற பெருந்தீ விபத்து!
உலகம்சமூகம்செய்திசெய்திகள்

சுவிஸ் எபெறெற்றிக்கோனில் இடம்பெற்ற பெருந்தீ விபத்து!

பகிரவும்
பகிரவும்

சுவிஸின் சூரிச் மாவட்டத்தில் உள்ள எபெறெற்றிக்கோன் கிராமத்தில் இன்று இடம்பெற்ற தீ விபத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் இடம்பெற்ற வீடு, பாரிய அளவிலான தீயால் முழுவதுமாக கருகி அழிந்துள்ளது.

தீவிபத்துக்குப் பின்னரே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நீரை பீச்சியடித்து தீயை கட்டுப்படுத்தியதுடன், தீ பரவுவதைத் தடுத்து நிறுத்தினர்.

சம்பவத்துக்கான முக்கியக் காரணமாக கடும் வெப்பநிலை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வெப்பம் காரணமாக வீட்டின் கூரையில் ஏற்பட்ட தீப்பற்றல், குறுகிய நேரத்திலேயே முழு வீடிற்கும் பரவியுள்ளது.

சம்பவத்தின்போது சுமார் 200 மீற்றர் தூரத்தில் இருந்து இந்த தீ விபத்தை நேரில் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த வே.கேசவன்  தனது Facebook தளத்தில் தெரிவித்ததாவது:

“வீடில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியது. எங்கள் இடத்திலிருந்தே அதன் வெப்பத்தை உணர முடிந்தது. அது மிகவும் அச்சுறுத்தலாக இருந்தது.” என்றார்.

தற்போது சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பது முதல் தகவல்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா உட்பட மூவர் பிணையில் விடுவிப்பு – வெளிநாட்டு பயணம் தற்காலிகமாகத் தடை!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மற்றும்  இருவர் இன்று (ஜூலை 3)...

ஸ்டார்லிங்கின் உள்நுழைவு: இலங்கையில் அதிகாரப்பூர்வமாக செயற்படத் தொடங்கியது

பல கோடி முதலீட்டாளரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலோன் மஸ்க் புதன்கிழமையன்று சமூக ஊடகமான...

டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அமைத்த 245 ரன் இலக்கை நோக்கி வங்கதேசம் பயணம்!

இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையில் நடைபெறும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி வெற்றி...

மெட்டாவின் புதிய AI புரட்சி: சூப்பர் இன்டெலிஜன்ஸ் நோக்கில் சுக்கர்பெர்க் முன்னெடுக்கும் பெரும் மாற்றம்!

மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் சுக்கர்பெர்க், தனது நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவை “சூப்பர்...