முகப்பு இலங்கை யாழின் மையப்பகுதியில் வீதியின் நிலை!
இலங்கைசெய்திசெய்திகள்

யாழின் மையப்பகுதியில் வீதியின் நிலை!

பகிரவும்
பகிரவும்

யாழ் நகரின் முற்றவெளிக்கு  அருகே உள்ள பண்ணை வீதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு பாரிய குன்றும் குழிகளுடன் காணப்படுகின்றது. யாழ் நகரின் மையப் பகுதியாக அமைந்துள்ள இந்த வீதியினை தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான வாகனங்கள் பல ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் பயன்படுத்தி வரும் இந்த வீதி மிகவும் மோசமான நிலையிலேயே பாதிக்கப்பட்டு காணப்படுகின்றது. இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில் “நாம் நமது பிள்ளைகளை இப்பாதையினூடாகவே பாடசாலை அளைத்துச் செல்கின்றோம் இவ்விதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன அதனால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது என தெரிவித்தனர்” அது மட்டுமன்றி வீதி அபிவிருத்தி அதிகார சபை  உத்தியோகத்தர்கள் மாநகர சபை உத்தியோகத்தர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் அனைவரும் தினமும் இந்த பாதைகளின் ஊடாகவே குழிகளில் விளுந்தும்  எறியும் செல்கின்றார்கள் இந்த வீதி நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்தாலும் இதுவரை யாரும் அதை திருத்துவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தனர்”. இந்த வீதி குன்றும் குழியுமாக இருப்பதனால் பல விபத்துகளும் அசம்பாவிதங்களும் இடம்பெற சந்தர்ப்பங்கள் உள்ளன. அது மட்டுமன்றி நகரின் அழகும் தரமும் கெட்டுப் போகின்றது மக்கள் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றார்கள் எனவே  சம்பந்தப்பட்ட திணைக்களம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமா?

 

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...