முகப்பு அரசியல் செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு – அகழ்வுப் பணிகள் நாளை இடைநிறைவு!
அரசியல்இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு – அகழ்வுப் பணிகள் நாளை இடைநிறைவு!

பகிரவும்
பகிரவும்

யாழ். செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் மேற்கொள்ளப்படும் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 54 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என்று அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.

இந்த மனித புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் பதினான்காவது நாள் நடவடிக்கைகள், இன்று (ஜூலை 9) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றன.

மொத்தமாக 23 நாட்களாக நடைபெற்றுவரும் இந்த அகழ்வாய்வுப் பணிகள், நாளை (ஜூலை 10) மதியத்துடன் தற்காலிகமாக நிறைவு பெறவுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்ட நடவடிக்கைகள் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் நீதியியல் பரிசோதனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • யார் இந்த மனித எலும்புகள்?

  • அவர்கள் யாரால், எதற்காக, எப்போது கொல்லப்பட்டனர்?

  • அவர்களின் குடும்பங்களுக்கு என்ன நீதியும் இழப்பீடும் கிடைத்துள்ளது?

 மனித உரிமைகள், நீதியியல் விசாரணை, சர்வதேச அவதானிப்பு ஆகியவை இப்போது தேவைப்படும் மிக முக்கியமான அம்சங்கள். இந்த உண்மைகள், சம்பவ வரலாறுகள், போர்க்குற்றங்கள், மறைந்த உண்மைகள் அனைத்தும் வெளிக்கொணரப்பட வேண்டும்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...