வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆசிய பரிவர்த்தனை அமர்வில் உலகின் முன்னணி கிரிப்டோ நாணயமான பிட்காயின் (Bitcoin) வரலாற்றில் முதல்முறையாக $116,781.10 என்ற உச்ச விலையை எட்டியுள்ளது. இதன் மூலம் 2025ஆம் ஆண்டில் இதுவரை 24% உயர்வை பதிவு செய்துள்ளது. தற்போது இது $116,563.11க்கு வர்த்தகமாகிறது.
பெரிய நிறுவனங்கள் பிட்காயினை மாபெரும் அளவில் வாங்கிக் கொண்டிருப்பது மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் கிரிப்டோ அனுகூலக் கொள்கைகள் இதற்குப் பின் காரணமாகக் கூறப்படுகின்றன.
ஹொங்கொங் Web3 சங்கத்தின் இணைத்தலைவர் ஜோஷுவா சூ “நிறுவனங்கள் இடையறாது பிட்காயின் வாங்கிக் கொண்டிருப்பதால் பரிமாற்றக் கணக்குகளில் கிரிப்டோ மத்தியில் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்வைத் தூண்டிவிட்டது,” என தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தில், டிரம்ப் ஒரு முக்கிய செயற்கூறு உத்தரவை பிறப்பித்து, கிரிப்டோ நாணயங்களை “மூலதன களஞ்சியமாக” வைத்திருக்க அரசாங்கத்திற்கு அனுமதி அளித்துள்ளார். மேலும், கிரிப்டோக்கு ஆதரவான பல முக்கிய நபர்களை அவர் தகுதி வாய்ந்த நிலைகளில் நியமித்துள்ளார்.
மேலும், டிரம்ப் குடும்ப நிறுவனங்களும் கிரிப்டோ துறையில் தங்களை ஈடுபடுத்தியுள்ளன.
Trump Media & Technology Group (DJT.O), பிட்காயின் உள்ளிட்ட பல கிரிப்டோ நாணயங்களில் முதலீடு செய்யும் ETF (Exchange-Traded Fund) ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக SEC தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டாவது பெரிய கிரிப்டோ நாணயமான ஈதர் (Ether), இன்றைய வர்த்தகத்தில் 5% அதிகரித்து $2,956.82யை எட்டியது. மேலும், இதற்குமுன் ஐந்து மாதங்களுக்குப் பிறகு $2,998.41 என்ற உச்சத்தை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
பிட்காயின் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஆனால் இதன் பின்னணி ஆழமாக பார்க்க வேண்டிய ஒன்று.
டிரம்ப் ஆட்சியின் கிரிப்டோ ஆதரவு நடவடிக்கைகள் நிறுவன முதலீட்டாளர்களின் திடீர் ஆர்வம், மற்றும் அரசு நிலைகளில் கிரிப்டோக்கு வழங்கப்படும் அங்கீகாரம் இவை அனைத்தும் சந்தையை தூண்டுகின்றன.
இது பிட்காயின் வளர்ச்சி மட்டும் அல்ல ஒரு புதிய நிதி அரசியலின் தொடக்கம் எனலாம்.
மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் – கிரிப்டோ வாய்ப்பா, அல்லது கட்டுப்பாடா?
“உச்ச விலை வெற்றியா? இல்லையெனில் புதிய ஆட்சி வடிவமா?”
கருத்தை பதிவிட