முகப்பு இலங்கை சுழிபுரம் சத்தியக்காடு சந்தியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல் – இருவர் காயம்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

சுழிபுரம் சத்தியக்காடு சந்தியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல் – இருவர் காயம்!

பகிரவும்
பகிரவும்

சுழிபுரம் சத்தியக்காடு சந்தியில் இன்று மாலை மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று பதிவாகியுள்ளது.

சத்தியக்காடு வீதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளும், யாழ்ப்பாணம் காரைநகர் பிரதான வீதி வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இருவரும் கடுமையாக காயமடைந்துள்ளனர். விபத்தில் ஈடுபட்ட இரு வாகனங்களும் கடும் சேதமடைந்துள்ளன.

காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும், ஆம்புலன்ஸ் வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, அவர்கள் முச்சக்கர வண்டிகளில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க, உப வீதிகளில் இருந்து பிரதான வீதிக்கு வரும் பயணிகள் அவசரத்தை தவிர்த்து, இருபுறத்தையும் நிதானமாக பார்த்து பின்னரே சாலை கடக்க வேண்டும்.

தற்போதைய வேகமான வாழ்க்கை முறையும், அவசர மனோபாவமும் இத்தகைய விபத்துகளுக்கு முக்கிய காரணமாக அமைகின்றன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...