முகப்பு இலங்கை 2025 புலமைப்பரிசில் நேரம், நிலையங்கள் அறிவிப்பு!
இலங்கைகல்விசெய்திசெய்திகள்

2025 புலமைப்பரிசில் நேரம், நிலையங்கள் அறிவிப்பு!

பகிரவும்
பகிரவும்

2025ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நாடளாவிய அளவில் நடைபெறவுள்ளது. இந்த பரீட்சை 2,787 நிலையங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சையின் இரண்டாம் பகுதி (Paper II) காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து முதல் பகுதி (Paper I) காலை 11.15 மணி முதல் 12.15 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் தரவுகளில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டுமெனில், ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 04 வரையிலான காலப்பகுதியில் அவற்றைச் செய்யலாம் எனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

சிறப்பு தேவைகள் உள்ள குழந்தைகள் மற்றும் பரீட்சை தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற, பரீட்சை திணைக்களத்தின் இணையதளமான https://onlineexams.gov.lk/eic ஐ பார்வையிடலாம்.

மேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்: 011-2784537, 011-2786616, 011-2784208, 011-2785413 என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...