முகப்பு செய்தி யாழ். மெரிஞ்சிமுனை மாதா கோயிலில் அடாவடி: மதுபோதையில் சுரூபம் உடைப்பு – NPP அமைப்பாளர் உள்ளிட்ட 8 பேர் கைது!
செய்திசெய்திகள்

யாழ். மெரிஞ்சிமுனை மாதா கோயிலில் அடாவடி: மதுபோதையில் சுரூபம் உடைப்பு – NPP அமைப்பாளர் உள்ளிட்ட 8 பேர் கைது!

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணம் மெரிஞ்சிமுனை – நாரயம்பதி பகுதியில் அமைந்துள்ள மாதா கோயிலின் சுரூபம், நேற்று இரவு மதுபோதையில் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பேரில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தீவக அமைப்பாளர் வேலணைச் சேர்ந்த வேல்முருகன் மயூரன் உட்பட 8 பேர், ஊர்காவற்றுறை பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் மாதா சுரூபத்தை முற்றிலும் உடைத்து சேதப்படுத்திய சந்தேகத்தின் பேரில் கோயில் நிர்வாகத்தினர் வழங்கிய புகாரை தொடர்ந்து பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தற்போது நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இச்சம்பவம் தொடர்பாக பல தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. மதுபண்பாட்டு சுதந்திரம், சமாதானம் மற்றும் மதநம்பிக்கைகளின் மீதான கண்ணியத்தை உறுதிப்படுத்தும் விதமாக, சட்டத்தின் முழு பலத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூகக் கோரிக்கை ஆகும்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...