ரஷ்யாவின் கடற்கரையை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட 8.8 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்குப் பின்னர், ஹவாயியில் 10 அடி உயரமுள்ள சுனாமி அலைகள் அடிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. ரஷ்யாவின் கம்சாட்கா குடாநாட்டின் கிழக்குக் கடலோர பகுதியில் உள்ள கடலடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்துக்குப் பிறகு, பசிபிக் பெருங்கடலின் பல பகுதிகளில் அதிகாரிகள் மிகுந்த விழிப்புடன் உள்ளனர். வடக்கே குரில் தீவுகள் முதல் ஹவாய் தீவுகள், மேலும் கிழக்கே அமெரிக்காவின் மேற்கு கடற்கரை வரையிலும் சுனாமி எச்சரிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட சுனாமி அலைகள் ஏற்கனவே வடக்கிலுள்ள அலாஸ்காவை தாக்கியுள்ளன.
பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) உறுதிப்படுத்தியபடி, சுனாமி அலைகள் தற்போது பல கடலோர பகுதிகளில் தாக்கத் தொடங்கியுள்ளன. ஹவாயியின் ஓஹுவின் வடக்குக் கடற்கரை ஹலெய்வாவில் பதிவான மிக உயர்ந்த அலை 4 அடி (1.2 மீட்டர்) உயரமாக இருந்தது. இந்த அலைகள் சுமார் 12 நிமிட இடைவெளியில் வந்துள்ளன.
இந்த 8.8 ரிக்டர் நிலநடுக்கம் ரஷ்யாவின் மக்கள் குறைவாக வசிக்கும் தொலைதூர கிழக்குப் பகுதியில் உள்ள பெட்ரோபவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி அருகே உள்ள கடற்கரையில், உள்ளூர் நேரப்படி காலை 03:17 மணியளவில் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் கண்காணிப்பு மையத்தின் (USGS) தகவலின்படி, இது நவீன வரலாற்றில் உலகளவில் பதிவாகிய 10 பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகும்.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல சக்திவாய்ந்த பின்னடைவு அதிர்வுகள் ஏற்பட்டன, இதில் ஒன்று 6.9 ரிக்டர் அளவில் பதிவானது.
தற்போது ஹவாய் மாநிலம், அலாஸ்காவின் அலியூஷியன் தீவுகள், மற்றும் வடக்குக் கலிபோர்னியாவின் சில பகுதிகளில் சுனாமி எச்சரிக்கைகள் அமலில் உள்ளன. மேலும் பல அமெரிக்க பசிபிக் கடற்கரை பகுதிகள் சுனாமி அறிவுறுத்தலின் கீழ் உள்ளன. அலைகள் அடையும் நேரங்கள் பகுதிகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன, இதைப் பற்றிய கண்காணிப்புகள் PTWC மற்றும் தேசிய சமுத்திரவியல் மற்றும் வானிலை அமைப்பான NOAA மூலம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.
ஜப்பானில், இருபத்தைந்து மில்லியன் மக்களுக்கு கடலோரப் பகுதிகளை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில நகராட்சிகள், மக்கள் அதிகம் திரளும் கடற்கரை பகுதிகளில் பாதுகாப்புப் பகுதியில் தடுப்புவலைகள் அமைத்துள்ளன, இதில் சிபா மாகாணத்தின் இனாகே பீச் உள்ளிட்ட பகுதிகளும் அடங்கும்.
Source:CNN News
கருத்தை பதிவிட