முகப்பு அரசியல் பிரபாகரனை கரையான் என சாதி வெறி கொண்டு பேசிய தவிசாளர். வெடித்தது போராட்டம். -முல்லைதீவில் சம்பவம்!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

பிரபாகரனை கரையான் என சாதி வெறி கொண்டு பேசிய தவிசாளர். வெடித்தது போராட்டம். -முல்லைதீவில் சம்பவம்!

பகிரவும்
பகிரவும்

முல்லத்தீவு மாவட்டத்திலே சிறந்த முறையில் கடமை ஆற்றிக் கொண்டிருக்கும் நீரியல் வள திணைக்கள உதவி பணிப்பாளருடைய முறையற்ற இடமாற்றத்தினை கண்டித்தும் முல்லைதீவு மாவட்டத்தில் மீனவ மக்களுக்கு எதிராக வன்மமான கருத்துக்களை தெரிவித்த பிரதேச சபை தவிசாளர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் முல்லைத்தீவு மாவட்டத்திலே இருக்கின்ற மீனவர் அமைப்புக்கள், மீனவ மக்கள் மற்றும் பிரதேச நலனை விரும்புகின்ற தனியார்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று (19.18.2025) மேற்கொண்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை கரையான் என்றும் முழு மீனை தின்றுவிட்டு கரையார் குணத்தை காட்டுகின்றான் என்றும் அவனை முதலில் சுட்டிருக்க வேண்டும் என்றும் கூறிய கரைதுறைப்பற்று தவிசாளரின் தொலைபேசி உரையாடலில் ஆத்திரம் அடைந்த மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்

போராட்டத்தின் போது கருத்து தெரிவித்த மக்கள் தவிசாளர் சுமந்திரனின் அடாவடிகள் மூலம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார் என்றும் முல்லைத்தீவு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உடைய நெருங்கிய சகா என்றும் தெரிவித்தனர். இவ்வாறான துரோகிகளை மண்ணை விட்டு துரத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவித்தார்கள்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...