முகப்பு இலங்கை யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

பகிரவும்
பகிரவும்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு பிரதமர் விசேட விடுமுறை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் மற்றும் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் இணைந்து பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவை சந்தித்து விடுமுறை கோரிக்கை வைத்தனர்.

அதனை ஏற்றுக் கொண்ட பிரதமர் உடனடியாக அமைச்சின் செயலாளருக்கு விடுமுறை அறிவிக்க பணித்துள்ளார்.

ஆனால், தற்போது வடக்கு கல்வித் திணைக்களங்கள் விடுமுறை கேட்டுக்கொண்ட பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மீண்டும் கல்வி அமைச்சரை சந்தித்து அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரி விடுமுறை அறிவிக்க வலியுறுத்துவதாக எம்.பி. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

எனினும் இதுவரை மாகாண கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...

பிரபாகரனை கரையான் என சாதி வெறி கொண்டு பேசிய தவிசாளர். வெடித்தது போராட்டம். -முல்லைதீவில் சம்பவம்!

முல்லத்தீவு மாவட்டத்திலே சிறந்த முறையில் கடமை ஆற்றிக் கொண்டிருக்கும் நீரியல் வள திணைக்கள உதவி பணிப்பாளருடைய...