முகப்பு இலங்கை இலங்கையில் மீண்டும் மின் கட்டண உயர்வு!
இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

இலங்கையில் மீண்டும் மின் கட்டண உயர்வு!

பகிரவும்
பகிரவும்

இலங்கை மின்சார சபை (CEB) வரும் 2025 ஆம் ஆண்டு இறுதிக் காலத்தில் (அக்டோபர் – டிசம்பர்) மின் கட்டணத்தை 6.8% உயர்த்தும் முன்மொழிவு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

இதற்கமைய, நாடளாவிய அளவில் 7.2 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது மின்சார உற்பத்தி செலவுகள் அதிகரித்திருப்பதனால், இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொது பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) இந்த முன்மொழிவை தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. எழுத்து வடிவிலும் வாய்மொழி வடிவிலும் கருத்துக்கள் பெறப்படவுள்ளதுடன், அக்டோபர் 7 ஆம் தேதிக்குள் அவை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் ஒன்பது பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. இதன் மூலம், மின் கட்டண உயர்வின் பாதிப்பு குறித்த பொதுமக்களின் கருத்துக்கள் சேகரிக்கப்படும். குறிப்பிடத்தக்க வகையில், கடந்த ஜூன் மாதத்தில் 15% வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...