முகப்பு இலங்கை ஹாங்காங்கில் இலங்கை இந்தியப் பெண்கள் கைது!
இலங்கைஉலகம்சமூகம்செய்திசெய்திகள்

ஹாங்காங்கில் இலங்கை இந்தியப் பெண்கள் கைது!

பகிரவும்
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 60
பகிரவும்

ஹாங்காங்க்: புயல் “ராகசா” எச்சரிக்கைச் விடுக்கப்பட்ட வேளையில், கடற்கரையில் “அலைபார்த்தல்” (Wave-chasing) நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு தென்னாசியாவைச் சேர்ந்த இரு பெண்கள் ஹாங்காங்கு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் தரப்பில் வெளியாகிய தகவலின்படி, அப்பே லெய் சோ (Ap Lei Chau) கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை பிற்பகல் இலங்கை மற்றும் இந்திய நாட்டுப் பெண்கள் இருவர் தங்களது நண்பர் சிறுவனுடன் கடலோரத்துக்குச் சென்றிருந்தனர். அப்போது அவர்கள் செல்பி எடுத்துக்கொண்டுக் கொண்டிருக்கையில் திடீரென ஏற்பட்ட பெரு அலை மூவரையும் கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் கடுமையான காயம் ஏற்படவில்லை.

இச்சம்பவம், கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி சாய் வானில் ஒரு குடும்பம் மூவரும் பெரு அலைகளில் சிக்கிய சம்பவத்துக்கு பிந்தையதாகும். அப்போது, தாயும் 5 வயது மகனும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தந்தை அவர்களை மீட்கக் குதித்தார். தற்போது மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புயல் காலங்களில் கடலோரப் பகுதிகளுக்கு செல்லாமல் இருக்குமாறு அதிகாரிகள் பலமுறை எச்சரித்திருந்தும், இவ்வாறான “அலைபார்த்தல்” நடவடிக்கைகள் தனிநபர்களின் உயிரையே ஆபத்துக்குள்ளாக்குவதோடு மட்டுமல்லாமல் மீட்புப் பணியில் ஈடுபடும் அவசர சேவை அதிகாரிகளுக்கும் பெரும் அபாயத்தை ஏற்படுத்துவதாகவும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், தற்போதைய புயல் நிலைமையில் “அலைபார்த்தல்” தொடர்பாக முதல் தடவையாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source:-The Standard

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...