முகப்பு இலங்கை மன்னாரில் பதற்ற நிலை : காற்றாலை கோபுர பொருட்களை எதிர்த்து மக்கள் போராட்டம்!
இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

மன்னாரில் பதற்ற நிலை : காற்றாலை கோபுர பொருட்களை எதிர்த்து மக்கள் போராட்டம்!

பகிரவும்
பகிரவும்

மன்னார் பகுதியில் இன்று (27) சற்று முன் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, நூற்றுக்கணக்கான போலீசார் மற்றும் கலகம் அடக்கும் படையினரின் பாதுகாப்புடன், காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பாரிய பொருட்கள் மன்னார் நகரை நோக்கி பாரிய வாகனங்களில் கொண்டு வரப்பட்டன.

இந்த நிலையில், பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் ஒன்று கூடி, மன்னார் நுழைவு பகுதியில் உற்சாகமான போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, கலகம் அடக்கும் போலீசாரின் பாதுகாப்புடன் குறித்த காற்றாலை கோபுரத்துக்கான பொருட்கள் தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.

மக்களின் விருப்பம், எதிர்ப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை புறக்கணிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான கலகம் அடக்கும் போலீசாரின் பாதுகாப்புடன் காற்றாலை கோபுர பொருட்கள் கொண்டு செல்லப்படுவது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரான செயல்.

மின்சார உற்பத்தி தேவையெனில் அது மக்கள் பங்கேற்புடன், உரையாடல் மூலம், சமரச மனப்பாங்குடன் நடைபெற வேண்டும். ஆனால், காவல் துறையினரின் சக்தியை பயன்படுத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது மக்களிடையே அச்சம் மற்றும் நம்பிக்கையின்மையை உருவாக்கும்.

சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மக்கள் எழுப்பும் குரல் அடக்கப்படாமல், கேட்டறியப்பட வேண்டியது தான் நல்லாட்சி.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

சம்பத் மணம்பெரி விசாரணை வழியே தாஜுதீன் மரணத்தில் புதிய தகவல்கள்!

இலங்கை பொதுஜன பெரமுனை (SLPP) உள்ளூராட்சி அரசியல்வாதி சம்பத் மணம்பெரி போதைப்பொருள் வழக்கில் விளக்கமறியவைக்கப்பட்ட நிலையில்...

வலிகாமம் பிரதேச சபை ஆடியோச் சர்ச்சை – உண்மை நிலை வெளிச்சம்!

கடந்த இரண்டு நாட்களாக வலிகாமம் பிரதேச சபை உத்தியோகத்தர்களின் உரையாடல் ஆடியோவும் அதனைச் சுற்றியுள்ள ஊகச்...

ஞாயிறு வரை ஹமாஸுக்கு டிரம்ப் கடைசி வாய்ப்பு – அமைதி அல்லது அழிவு!

வாஷிங்டன், அக்.03 – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசாவிற்கான அமெரிக்க சமாதானத் திட்டத்தை ஹமாஸ்...

தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டாயம் – இன்று முதல் நடைமுறை!

மேற்கு மாகாணத்திற்குள் இயங்கும் அனைத்து தனியார் பேருந்துகளிலும் பயணிகள் டிக்கெட் எடுப்பது இன்று (அக்டோபர் 01)...