முகப்பு அரசியல் ஈஸ்டர் தாக்குதல் – முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படவுள்ளனர் : ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க!
அரசியல்இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் – முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படவுள்ளனர் : ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க!

பகிரவும்
பகிரவும்

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், முன்னாள் இராணுவ அதிகாரிகளில் ஒருவர் அல்லது இருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடன் சந்திப்பு ஒன்றில் அவர் மேலும் கூறியதாவது, “தற்போதைய நிர்வாகம் முழுமையற்ற மற்றும் பிழைகளால் பாதிக்கப்பட்ட விசாரணையைத் தான் பெற்றுக் கொண்டது. உண்மையை வெளிக்கொணர புதிய விசாரணைகளை தொடங்க வேண்டிய நிலையும் உள்ளது.

தாக்குதலுக்கு உண்மையில் பொறுப்பானவர்களை அடையாளம் காண்பதே தற்போதைய விசாரணைகளின் குறிக்கோள் ஆகும். அரசியல் காரணங்களால் நீதி தாமதமாகியிருக்கிறது. தாக்குதலுக்குப் பிறகு சந்தேகநபர்கள் ஆட்சிக்கு வந்து, உயர் பதவிகளையும் வகித்தனர். சான்றுகள் அழிக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, மாற்றப்பட்டதால் ஆரம்பகட்ட விசாரணைகள் தவறான பாதையில் சென்றன என அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் குற்றப்புலனாய்வு துறையின் (CID) மீதான நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியதோடு, சமீபத்திய CID அதிகாரிகள் கைது சம்பவங்கள் உள்நாட்டு சபோட்டாஜை வெளிக்கொணர்ந்ததாகவும் தெரிவித்தார். அத்துடன் “இது நேற்று நடந்த சம்பவமல்ல, சிக்கலான சூழ்நிலையிலிருந்து நாங்கள் இதை பெற்றுள்ளோம். இருப்பினும் CID இத்திட்டத்தை முன்னெடுக்கக் கூடிய திறன் உடையது,” என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அவர் மேலும், முன்னாள் இராணுவ அதிகாரிகளில் சிலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், விசாரணைகள் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் கூறினார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...