முகப்பு அரசியல் மக்களுடனான பந்தம்தான் தலைவரின் உண்மையான மகிழ்ச்சி – மகிந்த ராஜபக்ஷ!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

மக்களுடனான பந்தம்தான் தலைவரின் உண்மையான மகிழ்ச்சி – மகிந்த ராஜபக்ஷ!

பகிரவும்
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 75
பகிரவும்

ஒரு தலைவருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சி மக்களுடன் செலவிடும் தருணங்களில்தான் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அவர், தலைவருக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு அரசியலால் மட்டுப்பட்டது அல்ல, மாறாக அது நம்பிக்கையும் பரஸ்பர மதிப்பும் கொண்ட உறுதிப்பிணைப்பாகும் என கூறியுள்ளார்.

“என் வாழ்நாள் முழுவதும் மக்களுடனே கலந்து வாழ்ந்ததால், அவர்களின் அன்பை நான் நன்கு உணர்ந்துள்ளேன். எந்தவித சுயநல நோக்கமும் இன்றி வெளிப்படும் இவ்வன்பு அளவிட முடியாத ஒன்று. இது வெறும் அரசியல் உறவல்ல, இதய பந்தம். இதனை உடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது மேலும் வலுவடையும்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், மக்களுடன் வாழ்ந்த அனுபவங்களே “ஒரு தலைவருக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய மகிழ்ச்சி” என்பதை உணர்த்தியதாகவும், தன்னோடு இருந்த அனைவருக்கும் மரியாதையுடன் நன்றியைத் தெரிவிப்பதாகவும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...

வருட முடிவுக்குள் தேயிலைத் தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.1,750 ஆக உயர்த்தப்படும் – ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க அறிவிப்பு!

பண்டாரவள, அக்டோபர் 12:இந்த ஆண்டின் முடிவுக்கு முன் தேயிலைத் தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.1,750 ஆக உயர்த்தப்படும்...