முகப்பு இலங்கை புதிய கல்வி சீர்திருத்தங்கள் பெயரில் போலி வாட்ஸ்அப் குழு – அமைச்சகம் எச்சரிக்கை!
இலங்கைகல்விசெய்திசெய்திகள்

புதிய கல்வி சீர்திருத்தங்கள் பெயரில் போலி வாட்ஸ்அப் குழு – அமைச்சகம் எச்சரிக்கை!

பகிரவும்
பகிரவும்

புதிய கல்வி சீர்திருத்தங்களை முன்னிறுத்தி “புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்கப்படும் கல்வி சபை” என்ற பெயரில் இயங்கும் போலி வாட்ஸ்அப் குழுவொன்று தற்போது ஆசிரியர்களையும் பொதுமக்களையும் ஏமாற்ற முயற்சித்து வருவதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்முறை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், இந்தக் குழு பல கல்வி வலயங்களில் உள்ள ஆசிரியர்களை ஒன்றிணைக்க முயற்சிப்பதாக கூறினாலும், அது எந்தவிதத்திலும் அரசின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்ற குழுவாக அல்ல என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், அந்தக் குழுவின் வழியாக இடம்பெறும் தகவல் பரிமாற்றங்கள் அல்லது நடவடிக்கைகளுக்கு அமைச்சு எந்தவிதப் பொறுப்பும் ஏற்காது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதோடு, ஆசிரியர்களும் பொதுமக்களும் இத்தகைய போலி குழுக்களின் வலையில் சிக்காமல், விழிப்புடன் இருந்து அரசின் புதிய கல்வி சீர்திருத்த திட்டத்தை பாதிக்க முயலும் தவறான முயற்சிகளால் வழிதவறாமல் இருக்க வேண்டும் எனவும் அமைச்சு எச்சரித்துள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...