முகப்பு இந்தியா அனலதீவுக்கு அருகே இந்திய படகு பறிமுதல் -இந்திய மீனவர்கள் 14 பேர் கைது
இந்தியாஇலங்கைசெய்திசெய்திகள்

அனலதீவுக்கு அருகே இந்திய படகு பறிமுதல் -இந்திய மீனவர்கள் 14 பேர் கைது

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணம் அனலதீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 14 பேர் நேற்று இரவு இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல் துறை இணைந்து நடத்திய விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படைப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கிடமான இந்திய மீன்பிடிப் படகு ஒன்று இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்ததை தொடர்ந்து, அதனைச் சுற்றிவளைத்து கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடிப் படகு ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக மயிலிட்டி மீன்பிடி மேற்பார்வையாளர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இலங்கை கடற்படை வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியை தடுக்கவும், கடல் வளங்களை பாதுகாக்கவும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...