முகப்பு இந்தியா நடிகை ஷோபனாவிற்கு பத்மபூஷண் விருது!
இந்தியாஉலகம்செய்திசெய்திகள்

நடிகை ஷோபனாவிற்கு பத்மபூஷண் விருது!

பகிரவும்
பகிரவும்

இந்திய சினிமாவில் பல்வேறு மொழிப் படங்களில் கலைத் திறமையை வெளிப்படுத்தியுள்ள முன்னணி நடிகை மற்றும் பரதநாட்டியக் கலைஞர் டாக்டர் ஷோபனா அவர்கள் 2025ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷண் விருதினைப் பெற்றுள்ளார்.

இந்த விருது, மே 27, 2025 அன்று டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் வழங்கப்பட்டது.

ஷோபனா  தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 230க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் ஒரு புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞருமாவார். 2006ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருந்தார்.

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான பட்டியல் ஜனவரி 25ஆம் திகதி குடியரசு தினத்தையொட்டி வெளியிடப்பட்டிருந்தது. அந்த பட்டியலில் இருந்து 19 பேருக்கு பத்மபூஷண் விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. அதில் ஷோபனாவின் பெயரும் இடம்பெற்றது.

அத்துடன், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர் ஆனந்த் நாக் மற்றும் ஆன்மீக வழிகாட்டி சாத்வி ரிதம்பரா ஆகியோருக்கும் பத்மபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது நடிகை ஷோபனாவின் நீண்டகால கலைப்பணி மற்றும் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்புக்கான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

பகிரவும்

1 கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

எருசலேமில் துப்பாக்கிச் சூடு : ஆறு பேர் பலி – 20 பேர் காயம்!

எருசலேமில் பரபரப்பான பேருந்து நிறுத்தம் ஒன்றில் திங்கட்கிழமை (08) காலை இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில்...

‘ஐஸ்’ இரசாயன வழக்கில் புதுப்புது சான்றுகள் – மிட்தெனியாவில் காவல் உபகரணங்கள் மீட்பு!

மிட்தெனியாவில் புதைக்கப்பட்ட காவல் உபகரணங்கள் மீட்பு : ‘ஐஸ்’ இரசாயன வழக்குடன் தொடர்பு மிட்தெனியா தலாவ...

பாரிய பேருந்து விபத்து. மாநகர சபை செயலாளர், உத்தியோகத்தர்கள் உட்பட 15 பேர் பலி!

பதுளை, செப்டம்பர் 05: இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் சாலை விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படும் சோகமான விபத்து,...

பாதாள உலகத் தலைவனின் மனைவி செப்டம்பர் 18 வரை சிறையில்!

கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் அசங்க எஸ். போதரகம, நேற்று (04) மிடெணியையைச் சேர்ந்த, பிரபல பாதாள...