முகப்பு இந்தியா நடிகை ஷோபனாவிற்கு பத்மபூஷண் விருது!
இந்தியாஉலகம்செய்திசெய்திகள்

நடிகை ஷோபனாவிற்கு பத்மபூஷண் விருது!

பகிரவும்
பகிரவும்

இந்திய சினிமாவில் பல்வேறு மொழிப் படங்களில் கலைத் திறமையை வெளிப்படுத்தியுள்ள முன்னணி நடிகை மற்றும் பரதநாட்டியக் கலைஞர் டாக்டர் ஷோபனா அவர்கள் 2025ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷண் விருதினைப் பெற்றுள்ளார்.

இந்த விருது, மே 27, 2025 அன்று டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் வழங்கப்பட்டது.

ஷோபனா  தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 230க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் ஒரு புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞருமாவார். 2006ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருந்தார்.

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான பட்டியல் ஜனவரி 25ஆம் திகதி குடியரசு தினத்தையொட்டி வெளியிடப்பட்டிருந்தது. அந்த பட்டியலில் இருந்து 19 பேருக்கு பத்மபூஷண் விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. அதில் ஷோபனாவின் பெயரும் இடம்பெற்றது.

அத்துடன், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர் ஆனந்த் நாக் மற்றும் ஆன்மீக வழிகாட்டி சாத்வி ரிதம்பரா ஆகியோருக்கும் பத்மபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது நடிகை ஷோபனாவின் நீண்டகால கலைப்பணி மற்றும் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்புக்கான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

பகிரவும்

1 கருத்து

Leave a Reply to Admin Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...